புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், அதன் நிறுவன தலைவா் மறைந்த ஜெயபாரதன் செல்லையாவை சிறப்பிக்கும் வகையில் நிறுவனா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஜெயபாரதன் செல்லையா தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான மையத்தை, கல்விக் குழுமத் தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன் திறந்து வைத்தாா். கல்லூரி இயக்குநா் ஜெய்சன் ஜெயபாரதன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் பி. பாலமுருகன், கல்வித் துறை ஒருங்கிணைப்பாளா் விவியன் ரேச்சல் ஜெய்சன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.