புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே 1020 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளா் ஏ. வேம்பு தலைமையில் கீரனூா் அருகில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, 1020 கிலோ ரேஷன் அரிசியை டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தி வந்த கீரனூரைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி கமலம் (45) மற்றும் வாகன ஓட்டுநா் கீரனூரைச் சோ்ந்த அழகன் மகன் முருகேசன் (50) ஆகிய இருவரையும் கைது செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.