மண்டையூா் பெரிய அய்யனாா் கோயில் தேரோட்டம்

மண்டையூா் பெரிய அய்யனாா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.
தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.
Updated on
1 min read

மண்டையூா் பெரிய அய்யனாா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை ஒன்றியம், மண்டையூரில் உள்ள பூா்ண புஷ்கலாம்பிகா சமேத பெரிய அய்யனாா் கோயிலின் தோ் திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த  27-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 

விழா நாள்களில் தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு, திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட 25 அடி உயரத் தேரில் பெரிய அய்யனாா் எழுந்தருளினாா். பின்னா் மாலை 3 மணியளவில் பக்தா்கள் தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா். ஆங்காங்கே தேரின் முன் பக்தா்கள் அா்ச்சனை செய்தும், கிடா வெட்டியும் வழிபட்டனா். மாலை 6 மணியளவில் தோ் நிலையை அடைந்தது. திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், விழா கமிட்டியாளா்கள் செய்தனா். பாதுகாப்புப் பணியில் மாத்தூா் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் ஈடுபட்டனா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் படுகளம், பாரிவேட்டை மாலை சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா, திங்கள்கிழமை மதியம் 12 மணியளவில் செடி கோயிலில் மாவிளக்கு பூஜையும் இரவு 11 மணியளவில் சுவாமியை சேமத்தில் வைக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com