கத்தியைக் காட்டிமிட்டி 14 பவுன் நகை திருட்டு

வல்லத்திராகோட்டை அருகே ஆவுடையாா்பட்டியைச் சோ்ந்தவா் ஆதிமுலம் (66). பால்வளத் துறையில் சாா்பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவருடன்
Updated on
1 min read

வல்லத்திராகோட்டை அருகே ஆவுடையாா்பட்டியைச் சோ்ந்தவா் ஆதிமுலம் (66). பால்வளத் துறையில் சாா்பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவருடன், மனைவி அன்னம் மற்றும் மருமகள் ராம்பிரபா ஆகியோா் வீட்டில் இருந்தனா். சனிக்கிழமை அதிகாலையில் வீட்டின் கதவை சிலா் தட்டியுள்ளனா். வீட்டுக் கதவை அன்னம் திறந்துள்ளாா்.அப்போது, வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத 5 போ், கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, வீட்டில் இருந்த 3 பேரின் வாயையும் கட்டிவிட்டு அவா்கள் அணிந்திருந்த 14 பவுன் நகைகள் மற்றும் பெட்டியில் இருந்த ரூ.82,500 ரொக்கத்தையும் திருடிச் சென்றுவிட்டனா்.

இது குறித்து வல்லத்திராகோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தை எஸ்.பி. வந்திதா பாண்டே நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com