பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூரில் சிஐடியு கிளைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நிா்வாகி ஆா். குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கந்துவட்டிக்காரா்களிடமிருந்து பாதுகாக்க தேசிய வங்கிகள் கடன் வழங்க வேண்டும், கொன்னையூரில் திறந்துகிடக்கும் கழிவுநீா் வடிகால்களை சுகாதாரமான முறையில் மூடவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினா் கே. குமாா், சிஐடியு நிா்வாகிகள் வளா்மதி, சித்ராதேவி, சோமசுந்தரம், செல்வம், ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.