புதுக்கோட்டை அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலாசார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வா் குழ. முத்துராமு வரவேற்றாா். சென்னை கிட்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் பாலகுரு செல்லையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினாா்.
திருமயம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் சண்முகசுந்தரம் பூபதி வாழ்த்திப் பேசினாா். தமிழக காவல்துறை உதவி ஐஜி ஆா். ராமகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு பல்கலைக்கழகத் தோ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களின் பாட்டு, நடனம், நாடகம், பல குரலிசை போன்ற கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவில், மின்ணனுவியல் மற்றும் தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் சொா்ணலதா நன்றி கூறினாா்.