கல்லாக்கோட்டையில் மனுநீதி முகாம்
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கல்லாக்கோட்டை ஊராட்சியில் மனுநீதி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் வீட்டுமனைப் பட்டா, சாலைவசதி, மயான வசதி செய்து தரவேண்டியும் பொதுமக்கள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.சின்னத்துரையிடம் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனா். வட்டாட்சியா் சி. புவியரசன் முன்னிலை வகித்தாா்.
முகாமில், கந்தா்வகோட்டை ஒன்றியக்குழு தலைவா் ரா. ரெத்தினவேல் காா்த்திக் , வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், திலகவதி, அரசு அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.