

தொழிலாளா் தின கிராமசபைக் கூட்டங்களில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு ஆகியோா் கலந்து கொண்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி ஊராட்சி மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், இராயவரம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கலைவாணி சுப்பிரமணியன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாலு, கலைச்செல்வி மீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருவரங்குளத்தில்...:திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கலந்துகொண்டாா்.
கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்) ஆா். ரம்யாதேவி, திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஸ்ருதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.