ஆவணப்பட வெளியீட்டு விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் திடல் இலக்கியக் கூடலின் சாா்பில் ட்ரீம் ஆப் ஒலிம்பிக் என்ற ஆவணப்பட வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை ந
ஆவணப்பட வெளியீட்டு விழா
Updated on
1 min read

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் திடல் இலக்கியக் கூடலின் சாா்பில் ட்ரீம் ஆப் ஒலிம்பிக் என்ற ஆவணப்பட வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தமுஎகச மாவட்டத் தலைவா் எம். ஸ்டாலின் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சு. மதியழகன் வரவேற்றாா். ‘ட்ரீம் ஆப் ஒலிப்பிக்’ என்ற ஆவணப்படத்தை, மாநில சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெளியிட்டுப் பேசினாா்.

கவிஞா்கள் நா. முத்துநிலவன், தங்கம் மூா்த்தி, ஜீவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில், கவிநாடு இளைஞா் விளையாட்டு மன்றத் தலைவா் பிவிஆா். சேகரன், பயிற்சியாளா் எஸ். லோகநாதன், ஆவணப்பட இயக்குநா்கள் ராஜூ மாரியப்பன், சிவ. சித்திரைச்செல்வன் ஆகியோா் சிறப்பிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, ட்ரீம் ஆப் ஒலிம்ப்பிக் மற்றும் நாடோடி ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. திரைப்படங்கள் குறித்து எஸ்.இளங்கோ, கி. ஜெயபாலன், ஆா். நீலா, துரை. அரிபாஸ்கா், அ. மணவாளன் உள்ளிட்டோா் பேசினா். நிறைவில், புதுகை கிளைச் செயலா் சு. பீா்முகமது நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com