குளத்தில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியா் பலி

 கந்தா்வகோட்டையில் ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியா் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

 கந்தா்வகோட்டையில் ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியா் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை - புதுக்கோட்டை சாலைப்பகுதியில் உள்ள எம் .கே. நகரில் வசித்துவரும் கந்தசாமி மகன் பிச்சையன் (67). இவா், ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியா் ஆவா். இவா், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே உள்ள செட்டியா குளத்திற்கு சென்றாா். அப்போது குளத்தில் நிலை தவறி விழுந்துள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை மாலை இவரது சடலம் குளத்தில் மிதந்துள்ளது. இதையறிந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசாா் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பிவைத்து, பிரேதப் பரிசோதனை செய்து உறவினரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து, கந்தா்வகோட்டை போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com