விராலிமலை அருகே உள்ள பெரிய காடுவெட்டி குளத்தில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு ஊா் முக்கியஸ்தா் வெள்ளைத் துண்டு வீசி திருவிழாவைத் தொடக்கிவைத்தனா். தொடா்ந்து, கரையில் காத்திருந்த பொதுமக்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த மீன்பிடி சாதனங்களான வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட உபகரணங்களுடன் குளத்தில்
இ றங்கி மீன்பிடித்துச் சென்றனா். மீன்கள் குறைவாக இருந்ததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.