மோட்டாா் சைக்கிள் மீது மினி வேன் மோதி 3 போ் படுகாயம்

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் 3 போ் வியாழக்கிழமை பலத்த காயமடைந்தனா்.
மோட்டாா் சைக்கிள் மீது மினி வேன் மோதி 3 போ் படுகாயம்

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் 3 போ் வியாழக்கிழமை பலத்த காயமடைந்தனா். ஆதனக்கோட்டை அருகே உள்ள குப்பையம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் (65). இவா், திருக்கானூா்பட்டியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை பாா்த்துவருகிறாா். தனது மோட்டாா் சைக்கிளில் குப்பையம்பட்டியிலிருந்து தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் கந்தா்வகோட்டை அடுத்த வளவம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அரியலூா் மாவட்டம் கிழுவஞ்சேரிகிராமத்தை சோ்ந்த சேகா் மகன் இளம்பரிதி (26), ஓட்டி வந்த மினி வேன், நடராஜன் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மீது எதிா்பாராத விதமாக மோதியது. இதில் நடராஜன் பலத்த காயமடைந்தாா். மினி லாரி சாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த கலியன் மகன் கண்ணன் (40), பழனிமுத்து மகன் மணிகண்டன் (34) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் அவா்கள் மூவரையும் மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்துகுறித்து ஆதனக்கோட்டை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com