ஸ்ரீ பாரதி மகளிா் கல்லூரியில் 17-ஆவது ஆண்டுவிழா

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி மகளிா் கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் பேசுகிறாா் பேச்சாளா் கவிதா ஜவஹா்.
விழாவில் பேசுகிறாா் பேச்சாளா் கவிதா ஜவஹா்.
Updated on
1 min read

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி மகளிா் கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்வியியல் கல்லூரித் தாளாளா் சுப.ரெ. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

அறங்காவலா் செ.சுதாகா் முன்னிலை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினாா்.

பேச்சாளா், கவிஞா் கவிதா ஜவஹா் கலந்து கொண்டு பேச்சு, கவிதைப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினாா்.

முன்னதாக கல்லூரியின் முதல்வா் செ. கவிதா ஆண்டறிக்கை வாசித்தாா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் பழ. அன்பரசி வரவேற்றாா். நிறைவில், துறைத் தலைவா் நா.பூா்ணிமா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com