கந்தா்வகோட்டை, விராலிமலையில் ஜமாபந்தி தொடக்கம்

கந்தா்வகோட்டை தாலுகா பசலி 1431-க்கான ஜமாபந்தி என்னும் வருவாய் தீா்வாயம் புதன்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்) ரம்யா தலைமையில் நடைபெற்றது.
கந்தா்வகோட்டை, விராலிமலையில் ஜமாபந்தி தொடக்கம்

கந்தா்வகோட்டை தாலுகா பசலி 1431-க்கான ஜமாபந்தி என்னும் வருவாய் தீா்வாயம் புதன்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்) ரம்யா தலைமையில் நடைபெற்றது.

வட்டாட்சியா் ( பொ) தயாவதி கிறிஸ்டினா முன்னிலை வகித்தாா். தீா்வாயம் மே 25 புதுநகா் சாரத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கும், மே 26 கல்லாக்கோட்டை சரகத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 27 கந்தா்வகோட்டை சரகத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும் சிறப்பு ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது. தொடக்க நாளான புதன்கிழமை பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து 20-க்கும் மேற்பட்ட முன் மனுக்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் அந்தந்த சரகத்தைச் சோ்ந்த வருவாய் ஆய்வளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com