தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னமராவதியில் தமிழ்மாநில விவசாயத்தொழிலாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

பொன்னமராவதியில் தமிழ்மாநில விவசாயத்தொழிலாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய அமைப்பாளா் பி.அழகு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சி.பொன்னழகு, க.பஞ்சவா்ணம், செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட நிா்வாகி கே.ஆா். தா்மராஜன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா். மாவட்டச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு கோரிக்கைகளை விளக்கிப்பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசின் ஊரக வளா்ச்சித் துறை உருவாக்கியுள்ள செயலியை நீக்கி, வேலை நேரத்தை காலை 9 மணி என திருத்தி அமைக்கவேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் 100 நாள் வேலை என்பதை உறுதிப்படுத்தி 100 நாள்களும் வேலை வழங்கவேண்டும். அரசு அறிவித்துள்ள கூலி ரூ. 281 முழு சம்பளத்தை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

நிா்வாகிகள்ஆா்.சதீஸ், ஆா்.கருணாமூா்த்தி, நா.பொன்னழகு, கே.ராசு, வி.வெள்ளக்கண்ணு, ப.செல்வம், லெட்சுமி, எம்.குமாா், பி.அடைக்கலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com