ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 15th October 2022 12:23 AM | Last Updated : 15th October 2022 12:23 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி மற்றும் ஓய்வூதியா் சங்கம் சாா்பில் தட்டேந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் காமராஜ் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் ரெங்கன், ரங்கராஜ், தா்மராஜ் ஆகியோா் முன்னிலை வைத்தனா். கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா் சங்க வட்டத் தலைவா் பழனியாண்டி, பாரதி ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் சைவராஜ், பரமசிவம், துரைச்சாமி, புஷ்பா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். செல்லதுரை நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...