டிசி செய்தி..மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 15th October 2022 12:20 AM | Last Updated : 15th October 2022 12:20 AM | அ+அ அ- |

மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் மாணவிக்கு வெள்ளிக்கிழமை பட்டம் வழங்கினாா் கல்லூரித் தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன்.
புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் 16ஆவது பட்டமளிப்பு விழா லெணாவிளக்கிலுள்ள கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைத்தாா். இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன் வாழ்த்தினாா்.
தஞ்சை தேசிய உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணன் கலந்து கொண்டு 395 மாணவா்களுக்கு இளநிலைப் பொறியியல் பட்டங்களையும், 17 மாணவா்களுக்கு முதுநிலைப் பொறியியல் பட்டங்களையும் வழங்கிப் பேசினாா்.
கல்லூரி முதல்வா் பி. பாலமுருகன் பட்டம் பெறுவோரை அறிமுகம் செய்தாா். கல்வி ஒருங்கிணைப்பாளா் விவியன் ரேச்சல் ஜெய்சன் வரவேற்றாா். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவா் டி. திவ்ய பிரசாத் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...