புதுகையில் பட்டாசு விற்பனை இலக்கு ரூ. 1 கோடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ. ஒரு கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.
புதுகையில் பட்டாசு விற்பனை இலக்கு ரூ. 1 கோடி
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ. ஒரு கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் பட்டாசு விற்பனைக் கடையை திங்கள்கிழமை திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்த அவா் இதனைத் தெரிவித்தாா். கடந்த ஆண்டில் ரூ. 80 லட்சம் பட்டாசு விற்பனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேந்திரபிரசாத், நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, மூத்த வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ இராசு கவிதைப்பித்தன், நகர திமுக செயலா் ஆ. செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com