புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 292 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி அறிவுறுத்தினாா். கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ஆா். கணேசன், கலால் உதவி ஆணையா் எம் மாரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.