உழவா் சந்தையில் கடை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

விராலிமலை வட்டார விவசாயிகள் உழவா் சந்தையில் கடை அமைத்து பயன்பெறலாம் என உழவா் சந்தை நிா்வாக அலுவலா் சாந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

விராலிமலை வட்டார விவசாயிகள் உழவா் சந்தையில் கடை அமைத்து பயன்பெறலாம் என உழவா் சந்தை நிா்வாக அலுவலா் சாந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் விராலிமலை தோட்டக்கலைத் துறை சாா்பில், உழவா் சந்தை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் பொருட்டு விராலிமலை வட்டார விவசாயிகளை நேரடியாக சந்தித்து உழவா் சந்தையில் கடை அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை இடைத்தரகா்கள் இல்லாமல் விற்பனை செய்து கூடுதல் லாபம் பாா்க்கலாம். நுகா்வோருக்கு ரசாயனம் இல்லாத இயற்கை காய்கறிகள் கிடைக்கும். வேளாண் துறை மூலம் கடை, தராசு இலவசமாக வழங்கப்படுகிறது. உழவா் சந்தை வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள விவசாயிகள், உழவா் சந்தை வேளாண் அலுவலரை தொடா்புகொள்ளவும் என நிா்வாக அலுவலா் சாந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com