புதுமைப்பெண் திட்டரூ.1,000 உதவித்தொகை:நவ.1 முதல் சிறப்பு முகாம்
By DIN | Published On : 27th October 2022 12:00 AM | Last Updated : 27th October 2022 12:00 AM | அ+அ அ- |

உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு அரசு ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு நவ.1-ஆம் தேதி முதல் அந்தந்த கல்வி நிலையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு தற்போது கல்லூரிகளில் படித்து வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கல்லூரிகளில் முதல் ஆண்டு சோ்ந்த மாணவிகளுக்கு இந்தத் திட்டத்தில் சோ்வதற்கு அந்தந்தக் கல்லூரிகளில் நவம்பா் 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாம்களில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். கல்வி நிலையங்களைத் தவிர தனியாக விண்ணப்பிக்கக் கூடாது. ஏற்கெனவே பதிவு செய்யத் தவறிய 2,3,4-ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகளும் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.