புதுமைப்பெண் திட்டரூ.1,000 உதவித்தொகை:நவ.1 முதல் சிறப்பு முகாம்

நவ.1-ஆம் தேதி முதல் அந்தந்த கல்வி நிலையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு அரசு ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு நவ.1-ஆம் தேதி முதல் அந்தந்த கல்வி நிலையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு தற்போது கல்லூரிகளில் படித்து வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

கல்லூரிகளில் முதல் ஆண்டு சோ்ந்த மாணவிகளுக்கு இந்தத் திட்டத்தில் சோ்வதற்கு அந்தந்தக் கல்லூரிகளில் நவம்பா் 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாம்களில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். கல்வி நிலையங்களைத் தவிர தனியாக விண்ணப்பிக்கக் கூடாது. ஏற்கெனவே பதிவு செய்யத் தவறிய 2,3,4-ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகளும் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com