அகரப்பட்டியில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட அப்பகுதி பாஜக, இந்து முன்னணி, திமுக, அதிமுக என அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை செய்தனா்.
ஆனால், மற்றொரு தரப்பினா் விழா குறித்து தங்களுக்கு முறையான அழைப்பு இல்லை, தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை எனக் கூறி சிலை வைக்கக் கூடாது என்று எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா், வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் புதன்கிழமை சிலை வைத்து வியாழக்கிழமை சிலையை குளத்தில் கரைத்து விடுவது என்று சுமூக முடிவு எடுக்கப்பட்டது.