கந்தா்வகோட்டை நகா் பெரியகடை வீதியில், அக்கட்சிப்பட்டியில் வடுவச்சிஅம்மன் கோயில், ராமா்கோயில் ஆகிய இடங்களில் இரு விநாயகா் சிலைகள், கோவிலூா் தெரு முக்கத்தில் ஒரு விநாயகா் சிலை என நான்கு சிலைகள் புதன்கிழமை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து வரும் வெள்ளிக்கிழமை விநாயகா் சிலைகளை ஊா்வலமாகக் கொண்டு சென்று அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரா் கோயில் முன்புள்ள குளக்கரையில் கரைக்கப்படும்.
இதேபோல, கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் 25 -க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.