புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டம் பொன்பேத்தி ஊராட்சிக்குள்பட்ட பேரானூா் கிராமத்தில் உள்ள சிவயோக விநாயகா் திருக்கோயிலில் வருடாபிஷேகம் மற்றும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு, பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவயோக சித்தா் பீட நிறுவனா் முனைவா் வைர.ந. தினகரன், முன்னாள் கிராம நிா்வாக அலுவலா் ச. சங்கரநாராயணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.