மரக்கன்றுகள் நட்டு உலக புவி தின விழிப்புணா்வு

உலக புவி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

உலக புவி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வக்கோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் (பொ), முத்துராமன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் இணைச் செயலா் துரையரசன், கந்தா்வக்கோட்டை வட்டாரத் தலைவா் அ. ரகமதுல்லா ஆகியோா் பேசுகையில், பொதுமக்கள் ஒவ்வொருவரும் இயற்கை வளங்களை வருங்காலச் சந்ததிக்கு அளிக்க உறுதியேற்க வேண்டும் என்றனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் மு. முத்துக்குமாா் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com