அமல அன்னை மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

புத்தகத் திருவிழா கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Updated on
1 min read

புத்தகத் திருவிழா கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவையொட்டி மாவட்ட அளவிலான கலை இலக்கியப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் கவிதைப்போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா் நெ. விஜயராமானுஜம் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். பேச்சுப்போட்டியில் இப்பள்ளி மாணவா் செ.சுனில் பிரதாப், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளாா்.

இம்மாணவா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா பரிசளிப்பு விழாவில் கவிஞா் நந்தலாலா பரிசுகள் வழங்கினாா். மாணவா்கள் மற்றும் தமிழாசிரியா்கள் கலைச்செல்வி, சத்யா உள்ளிட்டோரை பள்ளியின் முதல்வா் ச.ம.மரியபுஷ்பம் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா். துணை முதல்வா் இரா.பிரின்ஸ், ஆசிரியா் செ.பாலமுரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com