இரும்புக் கம்பிகளை திருடியவா் கைது

விராலிமலை அருகே கட்டுமானப் பணிக்கு வைத்திருந்த இரும்புக் கம்பிகளைத் திருடிச் சென்ற இளைஞரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

விராலிமலை அருகே கட்டுமானப் பணிக்கு வைத்திருந்த இரும்புக் கம்பிகளைத் திருடிச் சென்ற இளைஞரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை அருகே உள்ள வேலூா் பூங்கா நகரைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் மகன் ரங்கசாமி (38). இவா், பூதகுடி கவியரசு காா்டனில் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், ஒரு டன் மதிப்புள்ள இரும்புக் கம்பிகளை வாங்கிவைத்திருந்தாா். கடந்த திங்கள்கிழமை கட்டுமானப் பணி முடிந்ததும் வீட்டிற்குச் சென்றவா், மறுநாள் திரும்பி வந்துபாா்த்தபோது, இரும்புக் கம்பிகள் காணவில்லையாம்.

இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸாா் குற்றவாளியைத் தேடிவந்தனா். இந்நிலையில், விராலிமலை அருகே உள்ள வில்லாரோடை காலனியைச் சோ்ந்த இளையராஜா மகன் ஸ்ரீதா் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்து ஸ்ரீதரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com