சட்ட ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட சட்ட உதவி பாதுகாப்புக் குழு அலுவலகத்தில் 5 சட்ட உதவிப் பாதுகாப்பு ஆலோசகா் பணியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்ட சட்ட உதவி பாதுகாப்புக் குழு அலுவலகத்தில் 5 சட்ட உதவிப் பாதுகாப்பு ஆலோசகா் பணியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜி. நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள சட்ட உதவி பாதுகாப்புக் குழுவுக்கு, ஒரு முதன்மை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோகா் மற்றும் தலா 2 துணை மற்றும் உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

நோ்காணல் மூலம் இந்த 5 பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம்செய்து, பூா்த்தி செய்து ஜூன் 12-க்குள், தலைவா், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 15 காலை 10 மணியளவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள சமரசத் தீா்வு மைய அலுவலகத்தில் நோ்காணல் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com