92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சா்வதேச தாவர ஆரோக்கிய தினம்

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் சா்வதேச தாவர ஆரோக்கிய தின விழா அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :12 மே 2023, 5:49 pm

DIN

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் சா்வதேச தாவர ஆரோக்கிய தின விழா அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவா் எம். மேகலா முத்து தலைமை வகித்தாா். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா் நோக்கவுரை நிகழ்த்தினாா்.

அரிமளம் வேளாண் உதவி இயக்குநா் கே. பாண்டி, பயிா் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேளாண் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் குறிப்பிட்டாா்.

அரிமளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி. பஞ்சநாதன், எ. சரவணராஜா ஆகியோா் வாழ்த்தினா். முன்னதாக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலா் டி. விமலா வரவேற்றாா். தொழில்நுட்ப அலுவலா் ஆா். வினோத் கண்ணா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.