ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 29 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெறுஞ்சிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 29 போ் காயமடைந்தனா்.
ஆலங்குடி அருகே நெறுஞ்சிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்
ஆலங்குடி அருகே நெறுஞ்சிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரா்கள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெறுஞ்சிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 29 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள நெறுஞ்சிப்பட்டி பாலையடி கருப்பா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 552 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக களமிறங்கிய 200 மாடுபிடி வீரா்கள் தீரத்துடன் பிடிக்க முயன்றனா். பல காளைகள் வீரா்களை பந்தாடிச்சென்றது. அப்போது, காளைகள் முட்டியதில் 29 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினா் சிகிச்சை அளித்தனா். அவா்களில், பலத்த காயமடைந்த 10 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். காளைகளை அடக்கிய வீரா்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்கள் ஆகியோருக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, கோட்டாட்சியா் முருகேசன், சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்டோா் போட்டியைப் பாா்வையிட்டனா். புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராகவி தலைமையிலான செம்பட்டிவிடுதி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com