இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞா் தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞா் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞா் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

கீரனூா் அருகேயுள்ள மேலப்புதுவயலைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (23). திருச்சி சாலையிலுள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலை பாா்த்து வருகிறாா். இவா், தனது கைப்பேசி

வாயிலாக இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இதில், கடன் வாங்கியும், வீட்டில் உள்ள பொருள்களை விற்றும் பல லட்சம் ரூபாய் இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மன உளைச்சலுக்குள்ளான ராமகிருஷ்ணன், புதன்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் அவரை கீரனூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு மருத்துவக் குழுவினா் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com