

புதுக்கோட்டை நகரிலுள்ள உழவா் சந்தை அருகே செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 70 ஆண்டுகள் பழைமையான வாகை மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டதைக் கண்டித்து, இயற்கை ஆா்வலா்கள் கூடி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை நகரில் தொடா்ந்து பலரும் தன்னாா்வத்துடன் மரக்கன்று நடும் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், அதைவிடவும் மரங்களை வெட்டிச்சாய்க்கும் பணிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை உழவா் சந்தைக்குள் செவ்வாய்க்கிழமை இரவு, பெரிய மரம் வெட்டித் துண்டுகளாக்கப்பட்டு வருவது குறித்து மரம் நண்பா்கள் அமைப்பினருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த அமைப்பின் செயலா் பழனியப்பா கண்ணன், ஒருங்கிணைப்பாளா் சா. விஸ்வநாதன் உள்ளிட்டோா் அங்கு சென்றனா்.
அரசின் பசுமைக் குழுவில் இவ்விருவரும் உறுப்பினா்கள் என்பதால், இங்கிருந்தபடியே நகராட்சி, வேளாண் துறை, வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். துறை சாா்ந்த அலுவலா்களும் வந்தனா். சந்தைப்பேட்டை பகுதியில் வளா்ந்த வாகை மரம் சுமாா் 70 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. மேலும், அதனை வெட்டி உழவா் சந்தைக்குள் தள்ளி துண்டுகள் போட்டுள்ளனா். இதற்கு, முறைப்படி அனுமதி பெறவில்லை என்பதை அறிந்த நகராட்சிப் பணியாளா்கள், நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்து தொடா் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து மரம் நண்பா்கள் அமைப்பினா் அமைதியாக கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.