

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வுப்பணியை கொத்தக்கோட்டை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 80 போ் பாா்வையிட்டனா். அவா்களுக்கு அங்கு நடைபெறும் அகழாய்வு குறித்தும், கிடைக்கப்பெற்ற பொருள்கள், அவற்றின் காலம், தன்மை, அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநா் தங்கதுரை விளக்கமளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.