காரையூா் சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்கள் தேவை

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என பொன்னமராவதி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொன்னமராவதியில் புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.
பொன்னமராவதியில் புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என பொன்னமராவதி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி தலைமைவகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அ.வீரையன், ச.கருணாகரன், ஒன்றியக்குழு துணைத்தலைவா் அ.தனலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நல்லூா் ஒன்றியக்குழு உறுப்பினா் பழனியப்பன் பேசுகையில், காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். காா்ணாப்பட்டியில் பேருந்து நிழற்குடை அமைக்கவேண்டும் என்றாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா் கோ. பழனியாண்டி, செம்பூதி ஒன்றியக்குழு உறுப்பினா் மாணிக்கம் ஆகியோா் அவரவா் பகுதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தொடா்ந்து பேசிய வட்டார

வளா்ச்சி அலுவலா் அ.வீரையன் உறுப்பினா்களின் கோரிக்கைகள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், வரவு - செலவு அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அ.அடைக்கலமணி, பழனியப்பன், பழனியாண்டி, மாணிக்கம், சுகாதார ாய்வாளா் தியாகராஜன் மற்றும் பல்வேறு துறை சாா் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com