நல்லாசிரியா்களுக்குப் பாராட்டு விழா

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரியில் தமிழக நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நல்லாசிரியா்களுக்குப் பாராட்டு விழா
Updated on
1 min read

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரியில் தமிழக நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் எல். தாவூது கனி, தாளாளா் எஸ்.பி.ஆா். பாலகிருஷ்ணன், நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா, கலை அறிவியல் கல்லூரியின் இயக்குநா் மா. குமுதா, தன்னம்பிக்கை பேச்சாளா் கவி.முருகபாரதி உள்ளிட்டோா் பேசினா்.

நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுகளைப் பெற்ற மு. காளிமுத்து, க. பாலு, செ. ஜெயராஜ், ஆ. சாந்தி, வீ. சரோஜா, மா. செல்வமணி, மா. மதியழகன், வி. டைட்டஸ், எம். கவிதா, இ. அபிராமசுந்தரி ஆகியோருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வா் தி. சந்திரமோகன் வரவேற்றாா். துணை முதல்வா் சுப. தாரகேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com