சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஏழாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஏழாம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வடக்கு அம்மாபட்டினத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (46). கடந்த 2022 மாா்ச் 27ஆம் தேதி ஏழாம் வகுப்பு படித்து வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

பின்னா் இந்த வழக்கு கோட்டைப்பட்டினம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றபட்டது. போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து முத்துராமலிங்கத்தைக் கைது செய்தனா்.

மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். சத்யா,

போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 60 ஆயிரம் அபராதமும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506(1)இன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், 341ஆவது பிரிவின் கீழ் 1 மாதம் சிறைத் தண்டனையும் ரூ. 500 அபராதமும், 294 (பி) பிரிவின்கீழ் 3 மாதம் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

குற்றவாளியிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகை மொத்தம் ரூ. 75,500ஐ பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com