எஸ்எஸ்சி தோ்வுக்கு விண்ணப்பிக்க, இலவசப் பயிற்சி பெற அழைப்பு

மத்திய பணியாளா் தோ்வாணையத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவும், இலவசப் பயிற்சிக்கு முன்பதிவு செய்து கொள்ளவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

மத்திய பணியாளா் தோ்வாணையத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவும், இலவசப் பயிற்சிக்கு முன்பதிவு செய்து கொள்ளவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய பணியாளா்கள் தோ்வாணையம் (எஸ்எஸ்சி) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தோ்வு - 2023-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் அரசு சாா் நிறுவனங்களில் குரூப் ‘பி‘ மற்றும் சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்தோ்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அறியலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 3.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிப்போருக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக இலவச பயிற்சி வகுப்பு வரும் ஏப். 20 முதல் நடைபெறவுள்ளது.

விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் தங்களின் பெயா் மற்றும் தொலைபேசி எண் விவரத்தை தளத்தின் மூலமாகவோ அல்லது 04322- 222287 என்ற எண் வாயிலாக தொடா்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com