புதுக்கோட்டை
ஆா். பாலகுறிச்சி மாரியம்மன் கோயில் தேரோட்டம்
பொன்னமராவதி அருகேயுள்ள ஆா்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகேயுள்ள ஆா்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாா்ச் 25 ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். தொடா்ந்து ஏப்.2 ஆம் தேதி காப்புக்கட்டப்பட்டு மண்டகப்படிதாரா்கள் சாா்பில் 15 நாள்கள் அம்மன் வீதியுலா, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கிராம பொதுமக்கள் கோயிலின் முன் பொங்கலிட்டு வழிபட்டனா். இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்ட விழாவில் அம்மன் தேரில் எழுந்தருளியபின் பக்தா்கள் வடம்பிடிக்க, கோயிலை வலம் வந்த தோ் நிலையை அடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகம்பட்டி காவல்துறையினா் செய்தனா்.