புதுக்கோட்டை
அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
விராலிமலை, இலுப்பூா், அன்னவால் அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
விராலிமலை, இலுப்பூா், அன்னவால் அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
விராலிமலை அரசுத் தொடக்கப் பள்ளிக்கு குழந்தையுடன் வந்திருந்த பெற்றோா் அதைச் சோ்த்துச் சென்றனா். நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி புதுக்கோட்டை மாவட்டத் திட்ட அலுவலா் தங்கமணி, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் இளஞ்செழியன், பள்ளித் தலைமை ஆசிரியா் கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பொதுவாக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையானது ஜூன் மாதத்தில்தான் நடைபெறும். இந்தாண்டு முதல் முறையாக தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் ஏப்ரல் மாதத்திலேயே மாணவா் சோ்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.