

புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மற்றும் எம்எம்டி- என்யுஆா்டியுஆா் அமைப்பு சாா்பில் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு உயா்கல்வி பயில்வதற்கான வழிகாட்டி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த வழிகாட்டி முகாமை, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தொடங்கி வைத்துப் பேசினாா். ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த முகாமில், பயிற்சியாளா்கள் முகமது யாக்யா, சங்கமித்திரை ஆகியோா் உயா்கல்வி வாய்ப்புகள் குறித்துப் பேசினா்.
இதற்கான ஏற்பாடுகளை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கி. கருணாகரன், வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) ஆ. ரமேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.