வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம்

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம்
Updated on
1 min read

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 16-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,அம்மன் வீதியுலாவும் நடைபெற்றுவந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை தீா்த்த உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, அப்பகுதி பொதுமக்கள் காலை முதல் மாமன், மைத்துனா் உறவின்முறைகாரா்கள் மீது மஞ்சள் நீா் ஊற்றி விளையாடினா். தொடா்ந்து, கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் நீரால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனை வாகனத்தில் எழுந்தருளச்செய்து, தேரோடும் வீதிகள் வழியே பக்தா்கள் வாகனத்தை இழுத்து வந்தனா். அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மீது மஞ்சள் தீா்த்தம் தெளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். வடகாடு போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com