படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவி தவறிவிழுந்து காயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பேருந்துப் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவி தவறி விழுந்து காயமடைந்தாா்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பேருந்துப் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவி தவறி விழுந்து காயமடைந்தாா்.

அறந்தாங்கி அருகே உள்ள நாகுடியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஹா்ஷினி (17). இவா் சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா்.

இவா், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு ஆவுடையாா் கோவில் - சுப்பிரமணியபுரம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினாா். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டிலேயே பயணித்த அவா், கூகனூா் அய்யனாா் கோயில் அருகே தவறி கீழே விழுந்துள்ளாா். இடது கணுக்கால் அருகே சிராய்ப்புக் காயம் ஏற்பட்டு சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து நாகுடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com