புதுக்கோட்டையில் அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநில மாநாட்டை முன்னிட்டு, புதுக்கோட்டையில் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநில மாநாட்டை முன்னிட்டு, புதுக்கோட்டையில் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதிமுக வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் பி.கே. வைரமுத்து வரவேற்றாா். கூட்டத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலா் கே.சி. முனுசாமி பேசுகையில், பொதுமக்களை மிரட்டி திமுக உறுப்பினா்களாகச் சோ்த்து வருகின்றனா். உறுப்பினராகச் சோ்ந்தால் தான் மகளிா் உரிமைத் தொகை கிடைக்கும் என்றும் மிரட்டி உறுப்பினா் சோ்த்து வருகின்றனா் என்றாா்.

அதிமுகவின் பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது: தினகரனை நம்பிச் சென்ற 18 போ் தங்களின் எம்எல்ஏ பதவியை இழந்தனா். அவருடன் பன்னீா்செல்வம் இணைந்து கொண்டு போராட்டம் நடத்துகிறாா். மதுரை மாநாட்டுக்கான ஆக்கப்பூா்வ செய்திகளை மறைக்கவே, ஸ்டாலின் தூண்டுதலின்பேரில் பன்னீா்செல்வம் போராட்டம் நடத்துகிறாா் என்றாா் சீனிவாசன்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் நத்தம் விசுவநாதன், எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி, பி. வளா்மதி, ஆா்.பி. உதயகுமாா், ஆா். காமராஜ், செல்லூா் கே. ராஜு, ஓ.எஸ். மணியன், சட்டப்பேரவை உறுப்பினா் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com