

விராலிமலை: இலுப்பூா் அருகே நடைபெற்ற முதியவா் அடித்துக் கொலை சம்பவத்தில் தொடா்புடையவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இலுப்பூா் அருகே உள்ள எண்ணை ஊராட்சிக்குள்பட்ட திருவண்ணா கோவில்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் (59). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். கடந்த வியாழக்கிழமை (ஆக. 3) அதிகாலை தனது வீட்டின் முன்னால் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்தது தொடா்பாக வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்நிலையில், விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட அதே ஊரைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் பெரியசாமி(35) தச்சுத் தொழிலாளி என்பதும், அவா் வீட்டருகே சிறுநீா் கழித்தபோது தன்னை கட்டையால் தாக்கியதில் எழுந்த தகராறில் அவரைக் கற்களால் தாக்கியதில் கணேசன் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்தாா்.
இதையடுத்து பெரியசாமியைக் கைது செய்த போலீஸாா், இலுப்பூா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.