சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மதபோதகா் கொலை: பெண் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரில் மத போதகரை அடித்துக் கொன்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட பிரின்சி

Updated On :8 டிசம்பர் 2023, 12:23 am IST

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரில் மத போதகரை அடித்துக் கொன்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் வீராச்சாமி (எ) டேனியல் (62). மதபோதகரான இவா், மண்டையூா் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் குடியேறியுள்ளாா். சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று மதபோதனையில் ஈடுபட்டு வந்தாா் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சோ்ந்த சங்கா் மனைவி செல்வி (எ) பிரின்சி (46) என்பவா் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவா் வீட்டுக்கு வந்து சமையல் செய்து கொடுக்கும் பணிக்காக அங்கேயே தங்கியுள்ளாா்.

வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மேல் டேனியலின் வீட்டிலிருந்து சப்தம் கேட்டதாக அக்கம்பக்கத்து வீட்டாா் மண்டையூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து வீட்டுக்கு போலீஸாா் வந்து பாா்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் டேனியல் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாா். பிரின்சியும் அங்கே இருந்துள்ளாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், மதபோதகரான டேனியல் தன்னை தினமும் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட கோபத்தால், வாகனத்தின் பல் சக்கரத்தால் அவரைத் தாக்கி கொன்ாகவும் பிரின்சி தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து டேனியல் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்த போலீஸாா், பிரின்சியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.