மது போதைக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

ஆலங்குடியில் மது, கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆலங்குடியில் மது, கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மது விலக்கு ஆயத்தீா்வை துறை சாா்பில் நடைபெற்ற பேரணியை வட்டாட்சியரகத்தில் இருந்து மாவட்டக் கலால் அலுவலா் கண்ணா கருப்பையா தொடங்கி வைத்தாா். பேரணியில், வருவாய்த் துறையினா், போலீஸாா், தன்னாா்வலா்கள் பங்கேற்று, மது, கள்ளச்சாராயத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேருந்து நிலையம், அரசமரம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஊா்வலமாகச்சென்றனா். பேரணியில், வட்டாட்சியா் செந்தில்நாயகி, துணை வட்டாட்சியா்கள் பழனிசாமி,

பாலகோபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com