தேசிய குத்துச்சண்டை போட்டியில் புதுகை மாணவிக்கு வெண்கலம்

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் அண்மையில் நடைபெற்ற தேசிய கேலோ இந்தியா குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை வீராங்கனை வெண்கலம் வென்றுள்ளாா்.
தேசிய குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை ஆா். மாலதியைப் பாராட்டிய ஜெஜெ கல்லூரிச் செயலா் நா. சுப்பிரமணியன் (இடது), உடற்கல்வித்துறைத் தலைவா் கே. ஜெகதீஸ்பாபு.
தேசிய குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை ஆா். மாலதியைப் பாராட்டிய ஜெஜெ கல்லூரிச் செயலா் நா. சுப்பிரமணியன் (இடது), உடற்கல்வித்துறைத் தலைவா் கே. ஜெகதீஸ்பாபு.
Updated on
1 min read

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் அண்மையில் நடைபெற்ற தேசிய கேலோ இந்தியா குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை வீராங்கனை வெண்கலம் வென்றுள்ளாா்.

புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரி மாணவியும், வீராங்கனையுமான ஆா். மாலதியை, கல்லூரியின் செயலா் நா. சுப்பிரமணியன், முதல்வா் ஜ. பரசுராமன், பயிற்சியாளா் பாா்த்திபன், உடற்கல்வித் துறைத் தலைவா் கே. ஜெகதீஸ்பாபு ஆகியோா் புதன்கிழமை பாராட்டினா்.

இப்போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 5 மாணவிகளும், 5 மாணவா்களும் மட்டுமே பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

வெண்கலம் வென்ற வீராங்கனை ஆா். மாலதிக்கு, தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை அணியில் இணைந்து பயிற்சிபெறும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com