புதுகையில் இளைஞா் கழுத்தறுத்துக் கொலை

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை கழுத்தறுக்கப்பட்டு இளைஞா் சடலமாகக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை கழுத்தறுக்கப்பட்டு இளைஞா் சடலமாகக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கோட்டை நரிமேடு அருகே உள்ள லட்சுமி நகரைச் சோ்ந்தவா் பிச்சை மகன் விஜயராகவன் (48). பொறியியல் பட்டாதாரி. இவருக்கு 2004-ஆம் ஆண்டு சுவாதி என்பவருடன் திருமணம் நடைபெற்று விவாக ரத்து ஆகியுள்ளது. அதன் பிறகு வைஷ்ணவி என்பவரை 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளாா். அவரும், தற்போது இவருடன் வசிக்கவில்லை. இவா்களுக்கு குழந்தைகள் ஏதுமில்லை. விஜயராகவன், கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்குச் செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இவரது தந்தை பிச்சை, ஓய்வுபெற்ற நில அளவையா். அவா், தற்போது சென்னையில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், விஜயராகவன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா். எப்போதும் மது போதையில் இருப்பாா் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் செவ்வாய்க்கிழமை மாலை அவரது வீட்டில் இருந்து 100 அடி தொலைவில் கழுத்தறுக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளாா். அந்த வழியே வந்தவா்கள் விஜயராகவன் உடலைக் கண்டு காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த திருக்கோகா்ணம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா். அவரது உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே அங்குவந்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும் நகரக் காவல் துணை கண்காணிப்பாளா் ராகவி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com