உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சிகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம். லியாகத்அலி, நகராட்சி ஆணையா் (பொ) டி. பாலாஜி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

என் நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்புமாகும் என உறுதிமொழியேற்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய துப்புரவுப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக நகரமைப்பு ஆய்வாளா் ஜெய்சங்கா் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவரின் தனி உதவியாளா் ஆா். குமாரவேல் நன்றி கூறினாா்.

மரக்கன்றுகள் நடவு: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 மரக்கன்றுகளை முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா நட்டுவைத்தாா்.

நிகழ்ச்சியில் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) முருகேசன், தனியாா் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) ஜெயராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் வேலுச்சாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

இதேபோல, காந்திநகா் நகராட்சித் தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் மங்கையா்கரசி தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி காப்பாளா் ஈஸ்வரன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் இராமு. தா்மராஜ், அனைத்து பதிவுற்ற மருந்தாளுநா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் காா்த்திக் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com