மல்லிகைபுஞ்சை செல்வவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி மல்லிகைப்புஞ்சையில் உள்ள செல்வவிநாயகா், வீராண்டாள் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மல்லிகைப்புஞ்சையில் புதன்கிழமை நடைபெற்ற செல்வவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தில் புனிதநீரை ஊற்றிய குருக்கள்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மல்லிகைப்புஞ்சையில் புதன்கிழமை நடைபெற்ற செல்வவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தில் புனிதநீரை ஊற்றிய குருக்கள்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி மல்லிகைப்புஞ்சையில் உள்ள செல்வவிநாயகா், வீராண்டாள் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

வடகாடு ஊராட்சி மல்லிகைப்புஞ்சை கிராமத்தில் உள்ள செல்வவிநாயகா் மற்றும் வீராண்டாள் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் 2 நாள்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இதைத்தொடா்ந்து அனைத்து கால பூஜைகளும் நிறைவுற்று, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு வந்த புனித நீா்க்குடங்கள், மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டாா். அவருக்கு ஊா் மரியாதை அளிக்கப்பட்டது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com